செய்திகள்

தருமபுரியில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2019-02-09 16:11 GMT   |   Update On 2019-02-09 16:11 GMT
தருமபுரியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் நிஷா (வயது19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 7-ந்தேதி அன்று நிஷா கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் தந்தை ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இது குறித்து அவரது தாய் செல்வி ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News