செய்திகள்

ஈரோட்டில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் மனைவி உயிரிழப்பு

Published On 2019-02-09 13:22 GMT   |   Update On 2019-02-09 13:22 GMT
ஈரோட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு:

ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிபவர் பூமலை (வயது 31). மனைவி பெயர் கலைச் செல்வி (26).

பூந்துறை ரோடு ஸ்ரீநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஒரு பெண் குழந்தை உள்ளது.

போலீஸ்காரர் பூமலை பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தனியாக வீட்டில் இருந்த போலீஸ்காரர் பூமலையின் மனைவி கலைச்செல்வி திடீரென வி‌ஷத்தை குடித்தார். அப்போது அங்கு வந்த பூமலையும் மனைவி வி‌ஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

கணவன்-மனைவி இருவரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார். போலீஸ்காரர் பூமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News