செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த செல்போன் திருடன் கைது

Published On 2019-02-09 17:11 IST   |   Update On 2019-02-09 17:11:00 IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த செல்போன் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 3-வது நடைமேடையில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர் ராம்நாடு, பரமகுடி, பூம்பூரை சேர்ந்த பிரபாகரன்(வயது30) என்பதும், செல்போன் திருடன் என்பதும் தெரிய வந்தது. பலரிடம் கை வரிசை காட்டி உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News