செய்திகள்
ஒரத்தநாடு அருகே பெட்டி கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
ஒரத்தநாட்டில் பெட்டி கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு புதூர்கிராமம் ஆர்.வி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜாங்கம். மாற்றுதிறனாளியான இவர் ஒரத்தநாடு தேர்வுநிலை பேரூராட்சி அருகே சாலையோரம் கடை வைத்து வலையில் மற்றும் பெண்கள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் முடிந்து மாலை 6 மணிக்கு கடையை பூட்டி சென்று விடுவார்.
அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் விசாரணை நடத்தி வருகிறார்.