செய்திகள்

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2019-02-06 15:49 IST   |   Update On 2019-02-06 15:49:00 IST
ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கம் இவரது மனைவி மஞ்சுளா (வயது 45), கூலி தொழிலாளர்கள். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா கடந்த 3-ந் தேதி வி‌ஷம் குடித்த தற்கொலைக்கு முயன்றார்.அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News