செய்திகள்

தென்னை மரங்களை அகற்றியபோது மரம் முறிந்து மன்னார்குடி தொழிலாளி பலி

Published On 2019-01-31 17:35 GMT   |   Update On 2019-01-31 17:35 GMT
கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை அகற்றியபோது மரம் முறிந்து மன்னார்குடி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தம்பி தினேஷ் (28).

இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்ததால் அதனை சக தொழிலாளர்களுடன் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னை மரம் முறிந்து ரமேஷ் மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு உள்ளிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதுபற்றிய புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான ரமேசுக்கு பிரேமலத (32) என்ற மனைவியும், சாதனா (3) என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News