செய்திகள்

மானாமதுரை அருகே விபத்து: இளநீர் வியாபாரிகள் 2 பேர் பலி

Published On 2019-01-31 12:05 GMT   |   Update On 2019-01-31 12:05 GMT
டிரைசைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 இளநீர் வியாபாரிகள் பலியானார்கள்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம்புதூரைச் சேர்ந்தவர் சமயத்துரை (வயது55). அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (55). 2 பேரும் இளநீர் வியாபாரம் செய்து வந்தனர்.

வியாபார தேவைக்காக மதுரை சென்று டிரை சைக்கிள் வாங்கிக்கொண்டு அதனை ஓட்டியபடி ஊருக்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை இருவரும் மானாமதுரை அருகே துத்திக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது.

பஸ் எதிர்பாராதவிதமாக டிரைசைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் டிரை சைக்கிளை ஓட்டிச் சென்ற சமயத்துரை மற்றும் கருப்பையா தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த சமயத்துரை மற்றும் கருப்பையா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News