செய்திகள்

பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Published On 2019-01-30 16:47 GMT   |   Update On 2019-01-30 16:47 GMT
பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள சிக்கபூவத்தியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). கூலித்தொழிலாளி. அந்த பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2.11.2016 அன்று அந்த மாணவியை சக்திவேல் அழைத்து பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் பொன்மலை கொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.

அவர் மீது கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
Tags:    

Similar News