செய்திகள்
கடலூர் குண்டு உப்பலவாடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடி கிடப்பதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டம்- 1055 பள்ளிகள் மூடப்பட்டன

Published On 2019-01-29 10:04 GMT   |   Update On 2019-01-29 10:04 GMT
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo
கடலூர்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர்.

இதனால் அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo

Tags:    

Similar News