செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2019-01-28 17:55 GMT   |   Update On 2019-01-28 17:55 GMT
மணமேல்குடி அடுத்த ஏகனிவயலில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
மணமேல்குடி:

மணமேல்குடி அடுத்த ஏகனிவயல் கிராமத்தை சேர்ந்தவர் லூக்காஸ் மகன் சார்லஸ் (வயது 30). இவரது உறவினர்கள் மார்கோனிராஜ் (31), லியோ. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடிக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆடலை பகுதி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சார்லஸ் பரிதாபமாக இறந்தார்.

இதில் படுகாயமடைந்த மார்கோனிராஜ், ராஜவேலு ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லியோ லேசான காயமடைந்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த மார்கோனிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 
Tags:    

Similar News