செய்திகள்

கோவையில் இன்று காலை மனைவியை கொன்ற கணவர்

Published On 2019-01-25 12:06 GMT   |   Update On 2019-01-25 12:06 GMT
கோவையில் இன்று காலை தகராறில் மனைவி கழுத்தை துண்டால் இறுக்கி கொன்ற கணவரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை ஆவாரம் பாளையம் இளங்கோ நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(68). இவரது மனைவி செல்வி(60). இவர்களுக்கு பிரபாகரன்(34) என்ற மகனும் 2மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். 

சத்தியமூர்த்தி, செல்வி ஆகியோர் மகன் பிரபாகரனுடன் வசித்து வருகிறார்கள். இன்று காலை வீட்டில் இருந்த சத்தியமூர்த்தி, செல்வி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி துண்டால் தனது மனைவி செல்வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களாகவே செல்வியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு சத்தியமூர்த்தி தகராறு செய்தது தெரியவந்தது.

Tags:    

Similar News