செய்திகள்

திண்டுக்கல்லில் 2-வது நாளாக மறியல் - அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4,000 பேர் கைது

Published On 2019-01-24 12:26 GMT   |   Update On 2019-01-24 12:26 GMT
2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4000 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று 2-வது நாளாக மறியல் செய்தனர்.

திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர். எம்.ஜி.ஆர். சிலை முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோ‌ஷம் போட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 4 ஆயிரம் பேரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதே போல் தேனி நேரு சிலை முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலுக்கு முயன்றனர். சுமார் 2, 500 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News