செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளை
புதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
புதுவண்ணாரப் பேட்டை, ஜீவா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் முருகானந்தம். கட்டிட காண்டிராக்டர்.
இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.2½ லட்சம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.