செய்திகள்

மதுகுடிக்க வராததால் வாலிபர் மீது தாக்குதல் - நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2019-01-20 09:51 GMT   |   Update On 2019-01-20 09:51 GMT
மதுகுடிக்க வராததால் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

பொன்னேரியை அடுத்த ஆலாடு நெல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரை நண்பர்கள் பொன்னேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் திருவாயர் பாடியை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் மது குடிக்க அழைத்தனர்.

இதற்கு அருண் பாண்டியன் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அருண் பாண்டியனை தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜ், நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News