செய்திகள்

தாராபுரம்-காங்கயம் ரோட்டில் வாகனம் மோதி புள்ளிமான் பலி

Published On 2019-01-19 10:18 GMT   |   Update On 2019-01-19 10:18 GMT
தாராபுரம்-காங்கயம் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- காங்கயம் ரோட்டில் குட்டைகாடு என்ற இறந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்து கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வாகனம் மோதி இறந்த மானை மீட்டு எடுத்து சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News