செய்திகள் (Tamil News)
பழனியில் தைப்பூச விழா - தேனி மாவட்ட போலீசார் 387 பேர் பயணம்
தேனி மாவட்டத்தில் இருந்து பழனியில் தைப்பூச விழா பாதுகாப்பு பணிக்காக 387 போலீசார் சென்றுள்ளனர்.
தேனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா வருகின்ற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த பாதுகாப்பிற்காக தேனி மாவட்டத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 350 போலீசார் என மொத்தம் 387 பேர் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா வருகின்ற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த பாதுகாப்பிற்காக தேனி மாவட்டத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 350 போலீசார் என மொத்தம் 387 பேர் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.