செய்திகள்

கமுதி அருகே கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை- கணவர் கைது

Published On 2019-01-17 10:34 GMT   |   Update On 2019-01-17 10:34 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி:

கமுதி அருகே உள்ள அபிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோட்சே (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி லதா (30).

இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் லதா ஆசிரியை வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்த லதா, தான் சேலத்தில் வசிப்பதாகவும், துணிகளை எடுத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார்.

அதன்படி துணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் அருகே லதா சென்றபோது, மோட்சே மறித்து தகராறு செய்தார். மேலும் அவர் இரும்பு கம்பியாலும் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த லதா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி மோட்சேயை கைது செய்தனர்.
Tags:    

Similar News