செய்திகள்

கொடைக்கானலில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் நடத்திய 2 பேர் மீது வழக்கு

Published On 2019-01-12 12:35 GMT   |   Update On 2019-01-12 12:35 GMT
கொடைக்கானலில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் பிரபல ஓட்டல்கள், தனியார் சொகுசு பங்களாக்கள், பள்ளிகள், அதிகளவில் உள்ளன. இவற்றிக்கு தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

நாய்ஸ்ரோடு பகுதியில் போலி செக்யூரிட்டி சர்வீஸ் இயங்கி வருவதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த செக்யூரிட்டி நிறுவனம் அனுமதியில்லாமல் போலியாக நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகிய 2பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News