செய்திகள்

பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் மரணம்

Published On 2019-01-12 12:26 GMT   |   Update On 2019-01-12 12:26 GMT
பூந்தமல்லி அருகே 4-வது மாடியில் இருந்து விழுந்து என்ஜினீயரிங் மாணவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா ஜேய்ஷா (18).

இவர் ராமாவரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாவது ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் 4-வது மாடிக்கு சென்றார்.

அங்கு காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுப்பு கம்பி எதிர்பாராத விதமாக சரிந்தது.

இதில் தவறி கீழே விழுந்த வம்சி கிருஷ்ணா ஜோய்ஷா, ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவரை போரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News