செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2019-01-08 16:37 GMT   |   Update On 2019-01-08 16:37 GMT
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை:

தமிழகத்தில் பிளாஸ்டிக்பொருட்கள் தடையை தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதற்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு எவ்வாறு கடையின் உரிமையாளர்கள் கொடுக்கிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து சிவகங்கை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். #tamilnews
Tags:    

Similar News