செய்திகள்

கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Published On 2019-01-08 11:01 GMT   |   Update On 2019-01-08 11:01 GMT
கண்ணமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கேட் ரேணுகாம்பாள் நகரை சேர்ந்தவர் அமிர்தம்மாள் (வயது 70). நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு, ஊட்டியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார்.

இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் பின்பக்க கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அமிர்தம்மாள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

யாருமில்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடும் மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News