செய்திகள்

அரக்கோணம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி

Published On 2019-01-07 10:32 GMT   |   Update On 2019-01-07 10:32 GMT
அரக்கோணம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த புலியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் கார்த்திக்ராஜ் (வயது 18). இவர் திருவள்ளுரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று மாலை கார்த்திக்ராஜ் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறி உள்ளார்.

அப்போது கால் தகவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு கார்த்திக்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News