செய்திகள்

செங்கல்பட்டு கல்லூரியில் மருத்துவ மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-07 07:41 GMT   |   Update On 2019-01-07 07:41 GMT
செங்கல்பட்டு கல்லூரியில் படித்து வந்த புதுவையை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuducherryMedicalStudent
செங்கல்பட்டு:

செங்கல்பட்டில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் புதுவையை சேர்ந்த தேஸ்வர் அரவிந்தன் என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். 3-ம் ஆண்டு மாணவர்.

கல்லூரியில் கடந்த 3 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் தேஸ்வர் அரவிந்தன் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் மாணவர் அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தேஸ்வர் அரவிந்தன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவர் மரணம் குறித்து புதுவையில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் தேஸ்வர் அரவிந்தனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #PuducherryMedicalStudent
Tags:    

Similar News