செய்திகள்

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-01-04 11:38 GMT   |   Update On 2019-01-04 11:38 GMT
மார்த்தாண்டத்தில் காம்பவுண்டு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குழித்துறை:

அருமனை முழுக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஐசக். இவரது மகன் ஷானு (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோகன் (26).

இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் இருவரும் குழித்துறை கழுவன்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ஷானுவின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

திடீரென ரோட்டோரத்தில் இருந்த காம்பவுண்டு சுவர் மீது மோதியதில் ஷானு, ரோகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஷானு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஷானு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News