செய்திகள்
போளூர் அருகே பைக் விபத்தில் பெயிண்டர் பலி
போளூர் அருகே பைக் மீது மற்றொரு பைக் மோதிய விபத்தில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போளூர்:
போளூர் அங்காள பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது48) பெயிண்டர். இவர் இன்று காலை அத்திமூர் கிராமத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
போளூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பிச்சாண்டி பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர் அங்காள பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது48) பெயிண்டர். இவர் இன்று காலை அத்திமூர் கிராமத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
போளூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பிச்சாண்டி பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.