செய்திகள்

சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

Published On 2019-01-03 08:54 GMT   |   Update On 2019-01-03 08:54 GMT
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #Vigilancepoliceraid #ElectricityBoardoffice

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை மின் வாரிய அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

முக்கிய அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. தங்கம், வெள்ளி, நாணயங்களும் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின் வாரிய தலைமை பொறியாளர் முத்துவின் அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். நேற்று இரவு 9 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நீடித்தது. புத்தாண்டையொட்டி, மின் வாரிய ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மின் வாரிய உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரும் லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Vigilancepoliceraid #ElectricityBoardoffice

Tags:    

Similar News