செய்திகள்

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதம்

Published On 2019-01-03 06:10 GMT   |   Update On 2019-01-03 06:10 GMT
பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தாயில்பட்டி:

சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டி, ஆலைகளை மூடி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சிவகாசி பஸ் நிலையம் சாட்சியாபுரம் பஸ் நிலையம் அருகில், பூலாவூரணி, தாயில்பட்டி, சாத்தூர் மதுரை பஸ் நிறுத்தம், வெம்பக்கோட்டை உள்பட 13 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தேவா தொடங்கி வைத்தார்.

நிர்வாகிகள் சுரேஷ் குமார், ஜோதிமணி, அருளானந்தம், வேம்புலுசாமி மற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News