செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிகளை மீறியதாக 1,254 பேர் மீது வழக்கு

Published On 2019-01-02 12:13 GMT   |   Update On 2019-01-02 12:13 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 1,254 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

விருதுநகர்:

புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.

மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News