செய்திகள்

குடும்ப தகராறில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-12-31 09:17 GMT   |   Update On 2018-12-31 09:17 GMT
பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிபட்டியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் உசேன் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் இவரது மனைவி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த உசேன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட உசேனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News