செய்திகள்

காஞ்சீபுரம் அருகே சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை பிளேடால் அறுத்த தம்பி கைது

Published On 2018-12-26 06:28 GMT   |   Update On 2018-12-26 06:28 GMT
சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதிகைச் சேர்ந்தவர் சண்முகம் (54). சமையல் தொழில் செய்து வருகிறார்.

இவரது தம்பி சீனிவாசன் (49). இவர் சமையல், எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சண்முகம், சீனிவாசன் இருவரும் அவர்கள் தாயார் வீட்டில் முன்பாகத்திலும், பின் பாகத்திலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனிவாசன் முன்பாக சொத்தை தனது தாயாரிடம் கேட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த சீனிவாசன் தனது தாயார் மற்றும் அண்ணன் சண்முகத்திடம் சொத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இதை தட்டி கேட்ட அண்ணன் சண்முகம் கழுத்தை தன்னிடம் இருந்த பிளேடால் சீனிவாசன் அறுத்துள்ளார். அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தப்பி ஓடிய சீனிவாசனை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார். சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News