செய்திகள்
காட்பாடி அருகே காதல் தோல்வியால் கேட்டரிங் மாணவர் தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காதல் தோல்வியால் கேட்டரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
நாகர்கோவிலை சேர்ந்தவர் எட்வின்சேவியர். இவரது மகன் ஷத்ஜன்ராஜ் (வயது 19). இவர் காட்பாடி லட்சுமி நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி கேட்டரிங் படித்து வந்தார்.
ஷத்ஜன்ராஜ் ஒருபெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் ஷத்ஜன்ராஜ் காதலை ஏற்க மறுத்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் எட்வின்சேவியர். இவரது மகன் ஷத்ஜன்ராஜ் (வயது 19). இவர் காட்பாடி லட்சுமி நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி கேட்டரிங் படித்து வந்தார்.
ஷத்ஜன்ராஜ் ஒருபெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் ஷத்ஜன்ராஜ் காதலை ஏற்க மறுத்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.