செய்திகள்

பண்ருட்டி அருகே முன்விரோதத்தில் மோதல்-2 பேர் படுகாயம்

Published On 2018-12-23 17:21 GMT   |   Update On 2018-12-23 17:21 GMT
பண்ருட்டி அருகே வேலி பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை உள்ளது.

இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராமலிங்கத்தை ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதேபோல் ராமலிங்கம், அவரது மகன் சிவக்குமார், சுந்தர் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். இந்த மோதலில் வேல்முருகன், ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேர் மீதும் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர், சிவக்குமார், ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News