செய்திகள்
பொறையாறு அருகே பஸ் மோதி ஓ.என்.ஜி.சி. ஊழியர் பலி
பொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி ஓ.என்.ஜி.சி. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பொறையார் வள்ளுவ தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). அதே பகுதயை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர்கள் இருவரும் காரைக்காலில் உள்ள ஓ.என்ஜி.சி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இவர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பொறையாரை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பொறையார் ராஜீவ்புரம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த புதுச்சேரி அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சின்னதுரையை பொறையாறு போலீசார் மீட்டு காரைககால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.