செய்திகள்

ராமநாதபுரம் அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் அவதி

Published On 2018-12-20 10:22 GMT   |   Update On 2018-12-20 10:22 GMT
ராமநாதபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு கூறியதாவது:-

மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News