தாண்டிக்குடியில் கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள வாழைகிரி என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த உதயநிதி என்ற மதி (வயது 27) என்பதும் அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காருடன் உதயநிதி பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதான உதயநிதி மீது பட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.