செய்திகள்
ரிஷிவந்தியம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள கல்லேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது 65). சம்பவத்தன்று இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த வேலுவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலு, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள கல்லேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது 65). சம்பவத்தன்று இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த வேலுவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலு, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews