செய்திகள்

பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய தம்பதி

Published On 2018-12-17 10:52 GMT   |   Update On 2018-12-17 10:52 GMT
பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள சருக்குபட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி பாப்பா (வயது 48). தங்கமுத்துவுக்கும் அவரது தம்பி அன்னக்கொடி (42) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தங்கமுத்து இறந்து விட்டார். அதன் பிறகும் அன்னக்கொடியும், அவரது மனைவி கலா ஆகிய இருவரும் பாப்பாவிடம் தகராறு செய்து வந்தனர்.

சம்பவத்தன்று பாப்பாவை அன்னக்கொடியும், அவரது மனைவியும் தரக்குறைவாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னக்கொடியை கைது செய்தனர்.

Tags:    

Similar News