செய்திகள்

நாகையில் கடல் சீற்றம் - 4வது நாளாக மீனவர்கள் பாதிப்பு

Published On 2018-12-17 09:14 GMT   |   Update On 2018-12-17 09:14 GMT
நாகை மாவட்டத்தில் சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தென்கிழக்கே பெயிட்டி புயல் நிலைக்கொண்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா இடையே இன்று (17-ந் தேதி) பிற்பகலில் கரையை கடக்கிறது.

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான நாகை, தஞ்சையில் சில இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. நாகையில் கடல் அலைகளின் சீற்றம் ஆக்ரோ‌ஷத்துடன் உள்ளது. கடல் அலை சுமார் 3 மீட்டர் வரை உயரே எழும்புகிறது. கடலோர பகுதிகளில் காற்றும் வீசி வருவதால் நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இன்று 4-வது நாளாக நாகை, நாகூர், நம்பியார் நகர், அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி, செருதூர், விழுந்தமாவடி, வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பழையாறு துறைமுகம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 4-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான படகுகளால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை. சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
Tags:    

Similar News