செய்திகள்

வெம்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து பலி

Published On 2018-12-16 13:00 GMT   |   Update On 2018-12-16 13:00 GMT
வெம்பாக்கம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

செய்யாறு:

வெம்பாக்கம் அருகே உள்ள பெருங்காட்டூரை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு 1மகன் 1மகள் உள்ளனர்.

அபிராமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அபிராமி சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து மோரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News