செய்திகள்

திருவாரூரில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-14 12:26 GMT   |   Update On 2018-12-14 12:26 GMT
திருவாரூரில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் டவுன், அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நூர்மைதீன் (வயது 20). இவர் பஸ் நிலையத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கியுள்ளார். அப்போது தனது செல்போனை கடையின் டேபிளில் வைத்திருந்தாராம். இதனை நோட்டமிட்ட 2 பேர் அந்த செல்போனை திருடிய போது நூர்மைதீன் பார்த்து சத்தம் போட்டுள்ளார். 

உடன் அருகில் உள்ளவர்கள் இருவரையும் பிடித்து திருவாரூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருவாரூர் அருகே மேமங்கலம் இனியன் (19), திருவாரூர் அருகே தியானபுரம் ரஞ்சித்குமார் (16) என்பது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் பாரத் நேரு வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
Tags:    

Similar News