செய்திகள்

பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம்- தேடப்பட்டவர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2018-12-14 11:41 GMT   |   Update On 2018-12-14 11:41 GMT
பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் சிறுத்தையை வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறுபந்தக்கல் அம்மன் பதியை சேர்ந்தவர் சரவணக்குமார்(35), வழிபறி கொள்ளையன். இவர் மீது ஆழியாறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. ஆழியாறு அணைக்கு வரும் காதலர்களை மிரட்டி துன்புறுத்துவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சரவணக்குமார் மீது உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி வனச் சரகத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கு வைத்து பிடிக்கப்பட்டு அதன், நகங்கள், பற்கள் திருடப்பட்டிருந்தது. சுருக்கு வைத்து பிடிக்கப்பட்டதற்கான தடையத்தை அழிப்பதற்காக கொள்ளையர்கள் சிறுத்தையின் தலையை கழுத்துடன் அறுத்து இருந்தனர்.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை ஒன்றும் இதேபோல் வேட்டையாடப்பட்டு காண்டூர் கால்வாயில் வீசப்பட்டு திருமூர்த்தி அணையில் உடல் கிடைத்தது. இப்படி தொடர்ச்சியாக சிறுத்தையை வேட்டையாடிய வழக்கில் பொள்ளாச்சி வனத்துறையினர் சரவணக்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தபட்ட சிலரை ஆழியாறு சோதனைச் சாவடிக்கு அழைத்து சென்று விசாரணையும் நடத்தினர். அப்போது, சோதனை சாவடிக்கு சென்ற சரவணக்குமாரின் ஆதரவாளர்கள் வனத்துறையினர் மிரட்டி விசாரணை வளையத்தில் இருந்தவர்களை மீட்டுச்சென்றனர். போலீஸ், சப்-கலெக்டர் விசாரணை என தொடர்ந்ததால் வனத்துறையினர் சிறுத்தையை வேட்டையாடியவர்களை நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சிறுத்தையை வேட்டையாடியதாக வனத்துறையினரால் முக்கிய நபராக கருதப்பட்ட சரவணக்குமார் கேரளாவில் 2நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து நகையை பறித்த வழக்கில் கொல்லங்கோடு போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை பொள்ளாச்சி வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News