செய்திகள்

புத்துணர்வு முகாமில் பவானி கோவில் யானை பங்கேற்கவில்லை

Published On 2018-12-14 09:31 GMT   |   Update On 2018-12-14 09:31 GMT
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி உடல் நலக்குறைவால் பங்கேற்கவில்லை. #Elephants #Rejuvenationcamp
பவானி:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நல்வாழ்வு (புத்துணர்வு) முகாம் நடந்து வருகிறது.

அதேபோல இந்த ஆண்டும் இன்று யானைகள் நல வாழ்வு முகாம் இன்று மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் வந்து உள்ளன.

இதில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பவானி கோவில் யானை வேதநாயகி பங்கேற்கவில்லை.

உடல் நலக்குறைவால் யானைகள் நல்வாழ்வு முகாமுக்கு வேதநாயகி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. #Elephants #Rejuvenationcamp

Tags:    

Similar News