செய்திகள்
பல்லடம் அருகே வேன் மோதி மூதாட்டி பலி
பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது வேன் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் பூர்ணம்மாள் (வயது 65). நேற்று இரவு இவர் அருகில் உள்ள ஓட்டலுக்கு புறப்பட்டார். ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்கும் போது கரடிவாவியில் இருந்து வந்த வேன் பூர்ணம்மாள் மீது மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூர்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.