செய்திகள்

வாணியம்பாடி அருகே பைக்-ஆட்டோ மோதல்: பாலிடெக்னிக் மாணவன் பலி

Published On 2018-12-12 12:18 GMT   |   Update On 2018-12-12 12:18 GMT
வாணியம்பாடி அருகே லோடு ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவன் பலியானார்.

வாணியம்பாடி:

ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் மாதவன் (வயது 18). இவர் வாணியம்பாடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியரசன் (20). இவர்கள் 2 பேரும் இன்று காலை வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

நெக்குந்தி என்ற இடத்தில் பைக் சென்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவன் இறந்தார். நித்தியரசன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News