செய்திகள்

சாயல்குடி அருகே பழுதான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2018-12-09 17:32 GMT   |   Update On 2018-12-09 17:32 GMT
சாயல்குடி- அருப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கிறது.

சாயல்குடி:

சாயல்குடி- அருப்புக் கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங் களில் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டது.

இந்த சாலை பழுதாகி கரடு முரடாகவும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. மேலும் டி.வேப்பங்குளம் அருகேயுள்ள சாலையில் நடுப்பகுதி ஒருபக்கம் தாழ்வாகவும் மற்றொரு புறம் மேடாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதியைப் பின்பற்றாமல் சமமான சாலையில் செல் வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதனால் அடிக்கடி வாகனங்கள் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற் படுகிறது. சமீபத்தில் மரா மத்து செய்யப்பட்ட இந்த தார்ச்சாலை முறை யாக போடாததால் பல இடங்களில் குண்டும் குழி யுமாகவும், மேடு-பள்ள மும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இச்சாலையை மராமத்து செய்தவர்களின் முறைகேட்டால் தற்போது முன்பு நன்றாக இருந்த சாலையும் நடு நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், கொக்காடியிலிருந்து டி.வேப்பங்குளம் வரை வளைவான பகுதி என்ப தாலும் வாகன விபத்து அடிக்கடி ஏற்பட்டு வரு கிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழுதான சாலைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கைகள் விடுத்தும் சாலையை மராமத்து செய்யாமல் நெடுஞ் சாலைத்துறையினர் மெத்தனம் காட்டுவதால் தான் விபத்துகள் தொடர் கிறது என்று கூறினர்.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை மராமத்து செய்து சமமாக்கி விபத்து அபாயத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News