செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே பைக் மோதி பெண் பலி

Published On 2018-12-09 15:15 GMT   |   Update On 2018-12-09 15:15 GMT
ஜோலார்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெட்டியூரை சேர்ந்தவர் சந்திரா (வயது 50), இவர் நேற்றிரவு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் இவரது மீது மோதியது, இதில் சந்திராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்னின்றி இறந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News