செய்திகள்

திருவள்ளூரில் ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2018-12-08 09:56 GMT   |   Update On 2018-12-08 09:56 GMT
திருவள்ளூரில் ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் சிவி நாயுடு சாலை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (47) ஆசிரியர்.

இவர் அரக்கோணத்தில் இருந்து வரும் அம்மாவை அழைத்து செல்ல சென்னை சில்க்ஸ் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு சம்பவம்...

திருவள்ளூரை அடுத்த புடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (52). இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்திலிருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News