செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியை குத்தி கொல்ல முயன்ற கணவர்

Published On 2018-12-07 14:49 GMT   |   Update On 2018-12-07 14:49 GMT
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

பழனி:

பழனி தேரடி தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 48). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்பவருக்கும் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கண்ணகி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே அர்ஜூணன் செல்வி (வயது 36) என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்த்து வந்தார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அர்ஜூணன் தினசரி குடித்து விட்டு வந்து செல்வியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் செல்வி தனது மகனுடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். நேற்று தனியாக நடந்து சென்ற செல்வியை யாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாய்? என கேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

படுகாயமடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News