செய்திகள்

வைகோ பற்றி வன்னியரசு கூறியது கட்சியின் கருத்து அல்ல- திருமாவளவன் பேட்டி

Published On 2018-12-06 10:07 GMT   |   Update On 2018-12-06 10:07 GMT
முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #vanniarasu #vaiko

சென்னை:

தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த வைகோவிடம், திராவிட கட்சிகள் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ பதில் அளிக்கும் போது, தலித்துகளுக்கு எதிராக என்னை சித்தரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது. எங்கள் வீட்டில் வேலை செய்பவர் கூட தலித்துதான் என்று கூறினார்.

வைகோவின் இந்த பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது முகநூலில் பதில் அளித்தார்.

தலித் குறித்த கேள்விக்கு வைகோ நேர்மையாக எதிர் கொள்ளவில்லை. அவர் சொன்ன வார்த்தை ஆதிக்க மனோநிலையில் இருந்து கூறியது போல உள்ளது. இதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.


இது குறித்து திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல, அதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதனால் உடனடியாக நீக்கி விட்டார்

வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன் பின்னரும் வைகோ கூறிய கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவருடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்தார், தேர்தலுக்காக உதவி செய்தார் அதற்காக நான் அவருக்கு நன்றியும் தெரிவித்தேன். அது வெறும் வெளிப்படையான ஒரு கருத்து. அதில் ஒளிவு மறைவு இல்லை.

ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.எதன் அடிப்படையில் வைகோ பேசினார் என்பது தெரியவில்லை. என் மீது உள்ள கோபமாஅல்லது வன்னியரசுவின் கருத்திற்கு பதிலா என்று தெரியவில்லை.

அரசியல் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் திருமாவளவன் அல்ல. என்னை கடுமையாக விமர்சித்தவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. அப்படியே என்னுடைய விமர்சனங்களை சொல்ல வேண்டுமென்றால் கூட அது தைரியமாக தெரிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #vanniarasu #vaiko

Tags:    

Similar News