செய்திகள்
அ.தி.மு.க.வினருடன் மோதல்- தினகரன் ஆதரவாளர்கள் 2 பேர் கைது
சென்னையில் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் ஆதரவாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
எம்.ஜி.ஆர். நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. நிர்வாகி வைத்த பேனர் கிழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சாலிகிராமத்தில் தினகரன் ஆதரவாளர் காருக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் காரணமாக இருதரப்பினரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதும் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினர் மீதும் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் தினகரன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி மாணவர் அணி செயலாளர் அம்மன் கோவில் ராஜா, பரணி இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
எம்.ஜி.ஆர். நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. நிர்வாகி வைத்த பேனர் கிழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சாலிகிராமத்தில் தினகரன் ஆதரவாளர் காருக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் காரணமாக இருதரப்பினரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதும் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினர் மீதும் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் தினகரன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி மாணவர் அணி செயலாளர் அம்மன் கோவில் ராஜா, பரணி இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.